ஞாயிறு, 11 அக்டோபர், 2009

உஸ்மான்[ரலி] அவர்கள் ஃபித்அத்தை உண்டாக்கினார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை மட்டம் தட்டும் நூலில், வஹிக்கு முரணான சஹாபாக்களின் நடவடிக்கைகள் என்ற தலைப்பின் கீழ்,
ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.[புஹாரி எண் 912 ]
என்ற இந்த ஹதீஸை பதிவு செய்துவிட்டு,
வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரு கலீபாக்களும் அதை செயல்படுத்தியுள்ளனர் . ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அவர்கள் 'சுயமாக' இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள். எதோ ஒரு காரணத்தால் நபிவழியை கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. என்று எழுதியுள்ளார்கள்.

அன்பானவர்களே! அவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸில் உஸ்மான்[ரலி] அவர்கள் ஒரு அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள் என்று வருவது உண்மையே! ஆனால் எதற்காக அந்த அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்கள் அதிகமான காரணத்தால் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேதாவி கூறுகிறார்; மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அதிகப்படுத்தினார் என்று தனது சொந்த கருத்தை திணிக்கிறார். சரி! இதில் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக ஒரு அறிவிப்பை உஸ்மான்[ரலி] அதிகப்படுத்தினார் என்று கூறியவர், அடுத்து எதோ ஒரு காரணத்தால் நபிவழியைக்கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள் என்று கூறி தனக்குத்தானே முரண்படுகிறார். மேலும், இந்த செய்தியை வஹிக்கு முரணான நடவடிக்கைகள் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்ததால் உஸ்மான்[ரலி] அவர்கள் ஃபித்அத்தை உருவாக்கினார் என்று அடையாளம் காட்டுகிறார். அப்படியாயின் எல்லா ஃபித்அத்தும் வழிகேடு நரகில் தள்ளும் என்ற நபி[ஸல்] அவர்களின் பொன்மொழியின் படி உஸ்மான்[ரலி] அவர்கள் நரகம் செல்வார்களா? இப்படி ஒரு கேள்வி இலங்கையில் நடைபெற்ற விவாதத்தில் ஷேய்க் அப்துல்லா ஜமாலி என்பவரால் முன்வைக்கப்பட்டபோது,
அதற்கு பதிலளித்த இந்த அறிஞர், உஸ்மான்[ரலி] அவர்கள் பாங்கை அதிகப்படுத்தினார்கள் என்று வரவில்லை. அறிவிப்பை செய்யுமாறு சொன்னதாக அதுவும் கடைத்தெருவில் சொல்ல சொன்னதாகத்தான் வருகிறது. எனவே இது பாங்காக இருக்கமுடியாது. பாங்காக இருந்தால் பள்ளிவாசலில் சொல்லாமல் ஏன் கடைத்தெருவில் சொல்லவேண்டும் என்று அன்று சொன்னவர், இன்று அதையே வஹிக்கு முரணான, நபி[ஸல்] அவர்களின் நடைமுறைக்கு முரணான உஸ்மான்[ரலி ] அவர்களின் செயலாக காட்ட முற்படுகிறார் என்றால், இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து இன்னொரு அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது பாங்கு என்பது தொழுகைக்கு அழைக்கும் அழைப்பு அது எங்கு தொழுகை நடைபெறுகிறதோ அங்கு சொல்லப்படும். பள்ளிவாசல் இருந்தால் பள்ளிவாசலில் சொல்லப்படும். பள்ளிவாசல் இல்லாத ஊரில் அல்லது பாலைவனத்தில் இருந்தால் அவர்கள் எந்த இடத்தில் தொழுகை நடத்துவார்களோ அங்கு சொல்லப்படும் . ஆனால் மதீனாவில் புகழ் பெற்ற பள்ளிவாசல் இருக்க அங்கு அதிகப்படியான பாங்கு சொல்லுமாறு உஸ்மான்[ரலி] அவர்கள் சொல்லவில்லை. மாறாக கடைத்தெருவில் சொல்ல சொன்னதன் மூலம் அது பாங்கு அல்ல சாதரண அறிவிப்புதான் என்பது திண்ணம். இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இன்று உஸ்மான்[ரலி] அவர்களை வஹிக்கு முரனானவ்ராக காட்டும் இந்த 'அதிமேதாவி'யின் மாணவரும், ததஜ துணைத்தலைவருமான மரியாதைக்குரிய மவ்லவி. சுலைமான் அவர்கள் தனது நபிவழியில் தொழுகை சட்டங்கள் என்ற நூலில் இந்த விஷயத்தை எழுதியுள்ளதை பாருங்கள்;
உஸ்மான்[ரலி] அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கை போன்றது அல்ல. மக்கள் அதிகமானதால் உஸ்மான்[ரலி] அவர்கள் 'ஸவ்ரா'எனும் இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்ல சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள வீடாகும்.[இப்னுமாஜா 1125 ]
உஸ்மான்[ரலி] அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பை கூட பள்ளிவாசலில் செய்யவில்லை.எனவே உஸ்மான்[ரலி] அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியாகும்.
என்று எழுதியுள்ளார்.

அன்பானவர்களே! உஸ்மான்[ரலி] அவர்கள் சாதரணமாக சொல்லுமாறு பனித்த அறிவிப்பை, வஹிக்கு முரனானனதாக காட்டும் இந்த அதிமேதாவிக்கு அவரது மாணவரின் மறுப்பே போதுமானதாகும். சுலைமான் சொன்னது எனக்கு தெரியாது என்று இந்த அறிஞர் கூறமுடியாது. ஏனெனில் இந்த நூல் இவரது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவரது வலைத்தளத்தில் வெளியாகும் அனைத்துக்கும் நான் பொறுப்பாவேன் என்றும் கூறியுள்ளார். எனவே அன்பானவர்களே! உரிய ஆய்வின்றி உஸ்மான்[ரலி] அவர்களை குற்றவாளியாக்கும் இவர்களை போன்றவர்களை இனம்கானுங்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக