ஞாயிறு, 27 மே, 2012

''காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்''

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


தவ்ராத்திலும், இன்ஜீலிலும் சத்திய சஹாபாக்கள்;


مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது  இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.[48:29]

தவ்ராத்திலும், இன்ஜீலிலும் கூறப்படும் அளவுக்கு சிறப்பிற்குரிய அந்த நல்லறத் தோழர்களின் பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் கூறுவது அவர்கள், ''காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்'' என்று கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு சிலர், அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் நபித்தோழர்களின் இந்த பண்புக்கு மாற்றமாக, தனது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களை சத்திய இஸ்லாம் மார்கத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்து, அவர்களுடன் வியாபாரத் தொடர்பு கூடாது. அவர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கக் கூடாது. அதே நேரத்தில் முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என்று பத்வா வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்களோடு வியாபாரம் சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்பதற்காக இதை நாம் சொல்லவில்லை. மாறாக, முஸ்லிமல்லாதவர்கள் மீது காட்டும் கருணையைக் கூட இயக்கத்தை விட்டு பிரிந்த சக முஸ்லிம்கள் மீது காட்ட மறுக்கிறார்கள் என்பதற்காகவே.


அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் ஒரு பண்பையுடைய, காபிர்களிடம் மார்க்க விசயத்தில் கடுமையானவர்களாக, மூமீன்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாக இருக்கக்கூடிய அந்த உயந்த தோழர்கள் எங்கே? சக முஸ்லிம்களோடு கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அவர்களை பரம வைரிகளாக கருதும் நாம் எங்கே? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக