செவ்வாய், 22 செப்டம்பர், 2009

அன்னையின் கருத்துக்கு 'அபத்தம்' கற்பிப்பதா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட கருத்தை பதிவு செய்துவிட்டு, அந்த ஹதீஸுக்கு தங்களின் அபரீத கற்பனையை விரிவுரையாக்கி அன்னையின் கருத்திற்கு அபத்தம் கற்பித்துள்ளார்கள். அந்த ஹதீஸ் இதோ;
  • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள்.[புஹாரி எண் 869 ]

இந்த ஹதீஸுக்கு அவர்களின் வர்ணனை;

  • ஆயிஷா[ரலி] கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பது இறைவனுக்கு நன்கு தெரியும்.பெண்களிடம் ஏற்படும் தவறான நடவடிக்கை காரணமாக பெண்களை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது என்று இறைவன் நினைத்திருந்தால் அதை அவன் தெளிவாக சொல்லியிருப்பான்.அதையறியாமல் இறைவன் சட்டமியற்றிவிட்டான் என்பது போன்ற கருத்து ஆயிஷா[ரலி] அவர்களின் கூற்றில் அடங்கியுள்ளது.
  • மேலும் மார்க்கம் முழுமையாகிவிட்டது என்று திருக்குர்ஆண் கூறுகிறது. மார்க்கம் முழுமையாகிவிட்டது என்றால் அதற்குப்பின் எந்த மாற்றமும் வராது என்பதுதான் பொருள்.இதற்கு எதிராகவும் ஆயிஷா[ரலி] அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் பெண்களின் நடவடிக்கையில் எதோ ஒரு மாற்றத்தை கண்ட அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் ,நபி[ஸல்]அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். என்று சாதாரணமாக சொன்ன வார்த்தை இது. ஏனெனில், நபி[ஸல்] அவர்கள் மீண்டும் உலகுக்கு வரப்போவதுமில்லை. பெண்களின் நடவடிக்கையை பார்க்கப்போவதுமில்லை. பள்ளியை விட்டு தடுக்கப்போவதுமில்லை.முழுமையான மார்க்கத்தில் எந்த மாற்றமும் வரப்போவதுமில்லை. அப்படியிருக்க, பெண்களின் நடவடிக்கையை கண்டு ஆதங்கத்தில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையை அல்லாஹ்விற்கு முரணான சிந்தனை என்று வர்ணித்து அன்னையை குற்றவாளியாக்கிவிட்டு, கடைசியாக அந்த நூலில் இப்படி சமாளித்துளார்கள்;

  • ஆயிஷா [ரலி] இந்த கருத்தை மனதில் கொண்டுதான் இவ்வார்த்தைகளை கூறினார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.பெண்களின் நடவடிக்கைகளை கண்டு மனம் வெதும்பி இந்த சொல்லை பயன்படுவிடார்கள் என்றுதான் நாம் நல்லெண்ணம் வைக்கவேண்டும்.

அன்னை[ஆயிஷா[ரலி] அவர்களின் மீதான இவர்களின் நல்லெண்ணம் உண்மையானால், அந்த ஹதீஸை அதுவும் 'பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுத்தல்' என்ற பாடத்தின் கீழ் கொண்டு வந்தது ஏன்? பெண்கள் பள்ளிக்கு வந்ததை அன்னைஆயிஷா[ரலி] அவர்கள் தடுத்து போன்ற தோற்றத்தையும் தந்து, அன்னையவர்களின் கருத்துக்கு சுய கற்பனை வர்ணனை செய்துவிட்டு இறுதியாக 'நல்லெண்ணம் ' கொள்ளவேண்டுமாம்! சகாபாக்களின் கண்ணியம் எவ்வாறு பேணப்படுகிறது என்பதை மக்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக