செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நபி[ஸல்] அவர்களால் அடுத்த வழிகாட்டியாக அடையாளம் காட்டப்பட்டவர்!

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?' என்று, - நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்" என்று பதில் கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3659

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு பின்னால் தகுதியுடைய வழிகாட்டியாக அபூபக்கர்[ரலி] அவர்களை அடையாளம் காட்டியதன் மூலம் நபி[ஸல்] அவர்களின் சமுதாயத்தில் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்புக்குரியவர் அபூபக்கர்[ரலி] அவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதை புரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக