சனி, 22 ஆகஸ்ட், 2009

இரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;
நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு, 'இறைநம்பிக்கை கொண்டவர்களில் (அறப்போர் புரியச் செல்லாமல் தங்கள் இருப்பிடத்திலேயே) தங்கிவிட்டவர்களும் இறைவழியில் போரிடச் சென்றவர்களும் சமஅந்தஸ்துடையவர்களாக மாட்டார்கள்" என்னும் (திருக்குர்ஆன் 04:95) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்" என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். எனவே, அப்போது அல்லாஹ் தன் தூதருக்கு (வேத வெளிப்பாட்டை) அருளினான். நபி(ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடை நசுங்கி விடும் என்று அஞ்சினேன். பிறகு அவர்களுக்கு (இந்நிலை நீக்கப்பட்டு) லேசாக்கப்பட்டது. அப்போது அல்லாஹ், 'தகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)" என்னும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

ஆதாரம்;புஹாரி எண் 2832

இறைவழியில் போரிட்டவர்களும்-போருக்கு செல்லாமல் தங்கிவிட்டவர்களும் சம அந்தஸ்துடையவர்கள் ஆகமாட்டார்கள் என்ற இறைவசனம் இறங்கிய மாத்திரமே, இரு கண்களும் தெரியாத அப்துல்லா இப்னு உம்மிமக்தும்[ரலி] அவர்கள், அந்த அறப்போர் புரிந்த தியாகிகளுடைய அந்தஸ்து நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்ற வேதனையோடு இறைத்தூதரிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது வல்ல ரஹ்மான், அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம்[ரலி] அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 'தகுந்த காரணமின்றி' என்ற வாசகத்தை வசனமாக இறக்கி அருள்கிறான் என்றால், இந்த செய்தியில் நாம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்[ரலி] அவர்களின் ஆர்வத்தை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். கண்பார்வையில்லா நிலையிலும் அறப்போரில் பங்கெடுக்க முடியவில்லையே என்று வேதனை பட்டார்களே! அதுதான் ஈமானிய உறுதி! இன்றைக்கு நாடுகளாலும், செல்வத்தாலும், வலிமையாலும், தளவாடங்களாலும் ஓரளவு வலிமை பெற்ற நிலையிலும், 'எதிரியின் படையின் எண்ணிக்கையில் பாதி அளவு படை இருந்தாலே போர் கடமை' என்று நமக்கு நாமே ஃபத்வா வழங்கிக்கொண்டு, உலக அளவில் முஸ்லிம்களின் ரத்தம் ஆறாக ஓட்டப்படுவதை பார்த்து கண்மூடி இருக்கிறோமே நாம் தான் கண்ணிருந்தும் குருடர்கள். ஆனால் கண் பார்வையில்லாத நிலையிலும் தனது எண்ணத்தால் அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம் [ரலி] அவர்கள், எங்கோ உச்சத்திற்கு சென்றுவிட்டார்கள்.

அல்லாஹ் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக