புதன், 26 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் பெரிய தந்தையின் சிறப்பு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது உமர் இப்னு கத்தாப்(ரலி), அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்களை (அல்லாஹ்விடம்) மழை கோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர்(ரலி), 'இறைவா! நாங்கள் எங்கள் நபி(ஸல்) உயிருடன் இருந்த போது) அவர்கள் (உன்னிடம் பிரார்த்தித்தன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரி வந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழிவித்து வந்தாய். இப்போது எங்கள் நபியின் பெரிய தந்தை (அப்பாஸ் - ரலி - அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகிறோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!" என்று கேட்பார்கள். அதன்படியே மக்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டு வந்தது.

ஆதாரம்;புஹாரி எண் 3710
இந்த செய்தியில், நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் அவர்களின் பெரியதந்தை அப்பாஸ்[ரலி] அவர்களை முன்னிறுத்தி மழைவேண்டி பிரார்த்தித்தவுடன் இறைவன் மழையை இறக்குகிறான் எனில், அப்பாஸ்[ரலி] அவர்களின் சிறப்பையும்- அவர்களின் இறையச்சத்தையும் விளங்கமுடிகிறது. அதோடு அந்த உத்தமத்தோழர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டதும் புலப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக