வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

அறியாமல் உண்ட ஹராமான உணவை வாந்தி எடுத்த வாய்மையாளர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்ர்(ரலி) அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூ பக்ர்(ரலி) சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், 'இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டான். அபூ பக்ர்(ரலி), 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்" என்று சொன்னான். உடனே அபூ பக்ர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3842

இந்த செய்தியில்அபூபக்கர்[ரலி] ,அவர்கள் தனது அடிமை மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய வேண்டிய அடிமை தொகையை உண்கிறார்கள். பின்பு அந்த அடிமை ஹராமான வழியில் பொருளீட்டியதைதான்நம்மிடத்தில் தந்துள்ளான். அதைத்தான் நாம் சாப்பிட்டுவிட்டோம் என்பதை அறிந்தவுடன் தனது வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கிறார்கள் என்றால், அபூபக்கர்[ரலி] அவர்களின் வாய்மையை எண்ணிப்பாருங்கள்.

சமீபத்தில் ஒரு அறிஞர் இடம், என் தந்தை வட்டியின் மூலம் சம்பாதித்த சொத்து எனக்கு வாரிசு அடிப்படையில் கிடைத்துள்ளது. இது எனக்கு ஆகுமானதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அது உங்களுக்கு ஆகுமானதுதான்; ஏனெனில் தவறான வழியில் பொருளீட்டியது உங்கள் தந்தைதான். அந்த பாவத்திற்கு அவர்தான் பொறுப்பாளி. உங்களுக்கு அதில் சம்மந்தமில்லை. எனவே வாரிசு அடிப்படையில் கிடைத்த அந்த சொத்து உங்களுக்கு ஆகுமானதே! என்று அந்த அறிஞர் பதிலளித்தார்.
நன்றாக கவனிக்கவேண்டும் கொடிய வட்டியின் மூலம் சேர்த்த பொருள் ஆள் மாறும்போது ஆகுமாகிவிடுகிறது என்று ஃபத்வா வழங்கும் அறிஞர்கள் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், தனது அடிமை தவறான வழியில் பொருளீட்டிய தொகையில் உண்பதை வெறுத்த அபூபக்கர் ரலி அவர்கள் எங்கே!
வரதட்சனை உணவு வீட்டு தேடி வந்தால் அது அன்பளிப்பு; ஆள்மாறி விட்டால் [அது எந்த வழியில் சம்பாதித்ததாக இருந்தாலும்] ஆகுமானது என்று பத்வா வழங்கும் மேதைகள் எங்கே!
யார் மேன்மக்கள்..? அந்த சத்திய ஸகாபாக்கள் அல்லவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக