ஞாயிறு, 27 மே, 2012

''காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்''

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


தவ்ராத்திலும், இன்ஜீலிலும் சத்திய சஹாபாக்கள்;


مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது  இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.[48:29]

தவ்ராத்திலும், இன்ஜீலிலும் கூறப்படும் அளவுக்கு சிறப்பிற்குரிய அந்த நல்லறத் தோழர்களின் பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் கூறுவது அவர்கள், ''காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்'' என்று கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு சிலர், அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் நபித்தோழர்களின் இந்த பண்புக்கு மாற்றமாக, தனது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களை சத்திய இஸ்லாம் மார்கத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்து, அவர்களுடன் வியாபாரத் தொடர்பு கூடாது. அவர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கக் கூடாது. அதே நேரத்தில் முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என்று பத்வா வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்களோடு வியாபாரம் சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்பதற்காக இதை நாம் சொல்லவில்லை. மாறாக, முஸ்லிமல்லாதவர்கள் மீது காட்டும் கருணையைக் கூட இயக்கத்தை விட்டு பிரிந்த சக முஸ்லிம்கள் மீது காட்ட மறுக்கிறார்கள் என்பதற்காகவே.


அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் ஒரு பண்பையுடைய, காபிர்களிடம் மார்க்க விசயத்தில் கடுமையானவர்களாக, மூமீன்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாக இருக்கக்கூடிய அந்த உயந்த தோழர்கள் எங்கே? சக முஸ்லிம்களோடு கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அவர்களை பரம வைரிகளாக கருதும் நாம் எங்கே? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.




சனி, 26 மே, 2012

தாயா? மார்க்காமா? தளராத உறுதியுடன் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

நான்[சஅத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார் மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது   அல்லாஹ்,

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னு
டைய மீளுதல் இருக்கிறது."
நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
ஆகிய வசனங்களை அருளினான். என்று சஅத் இப்னுஅபீவக்காஸ்[ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. வது ஹதீஸாக பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில், இஸ்லாத்தை விட்டுவிட வேண்டும் என்று தன்னுடைய தாய் மூன்று நாட்கள்உணவருந்தாமல், பருகாமல் மயக்கமுற்றபோதும், சஅத்[ரலி]அவர்கள், தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய முஸ்லிம்களிடம் காணமல் போனது ஏ ன்? திருமண நேரத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால் நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுனேன் நபிவழியில் மஹர்கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா எங்கம்மா'டேய்ய்! நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான் செத்துருவேன்என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்ததுல'தான் அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.

இது உண்மையா? தாய் கட்டளையிட்ட எத்தனையோ உலக விசயங்களை கண்டுகொள்ளாத இவர்கள், மார்க்கத்திற்கு முரணாண இந்த விசயத்திற்கு மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போவது ஏன் ? காரணம் ஒன்றுதான். 
சஹாபாக்கள் அல்லாஹ்வின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்]  அவர்களின் கூற்றுக்கும் முன்னுரிமை தந்தார்கள். இவ்விரண்டுக்கும் முரணான மனிதர்களின் கூற்றை, அது பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் புறந்தள்ளினார்கள். எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழப்போம். ஆனால் ஈமான் இழக்க மாட்டோம் என்பதுதான் அவர்களின் நிலை. காரணம் இந்த இஸ்லாத்தைப் பெறுவதற்கு அந்த நல்லறத் தோழர்கள் செய்த தியாகங்கள் அவர்களுக்கு இந்த உறுதியைத் தந்தது. ஆனால் நாமோ வாரிசு அடிப்படையில் பெற்றதனால் இந்த ஈமானின் சுவை நமக்குத் தெரிவதில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெரும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!