புதன், 28 அக்டோபர், 2009

ஹதீஸை விளக்கினார்களா..? விலக்கினார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை நிராகரிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள், ஹதீஸ்கள் குர்ஆணுக்கு முரண்படுமா..? என்ற நூலை எழுதியுள்ளார்கள். அதில் 'குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்கமாட்டார்கள் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் கூறுகிறோம். நாம் கூறும் இந்த விதியின் அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததை பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக்கொள்ளலாம். என்று பதிவு செய்துள்ளார்கள் .அதாவது குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற காரணத்தை கூறி இந்த 'புதுமைவாதிகள்' ஹதீஸை நிராகரித்தது போன்று, சகாபாக்களும் நிராகரித்தார்கள் என்று கூறவருகிறார்கள். அதோடு தங்களின் கூற்றுக்கு சான்றாக சில ஹதீஸ்களையும் முன்வைத்துள்ளார்கள். அதில் சில;

  1. உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்" என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே" என்றும் கூறினார்கள்.[முஸ்லிம் ].

  2. உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது;

இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக இப்னு உமர்[ரலி]அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா[ரலி] அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா[ரலி] அவர்கள் கூறினார்கள்; இப்னு உமர் தவறாக விளங்கிக்கொண்டார். இறந்தவர் தன் சிறிய,பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர் என்று தான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம்]

  • இரண்டு மனிதர்கள் ஆயிஷா[ரலி] அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண், கால்நடை, வீட்டு ஆகியவற்றில் மட்டும்தான் இருக்கிறது என்று நபி[ஸல்]அவர்கள் கூறியதாக அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவித்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்துவிட்டு, அபுல்காசிமிற்கு இந்த குர்ஆணை அருளியவன் மீது சத்தியமாக! அறியாமை காலமக்கள் சகுனம் என்பது பெண்,கால்நடை,வீட்டு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்றுதான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்த துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது என்ற வசனத்தை ஓதினார்கள்.[அஹ்மத்]

மேற்கண்ட மூன்று செய்திகளையும் பதிவு செய்துவிட்டு, குர்ஆணுக்கு முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று நாம் கூறும் அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்காக இந்த செய்திகளை கூறியுள்ளோம்என்று முடித்துள்ளார்கள்.

இந்த இந்த ஹதீஸ்களை கவனமாக படியுங்கள். இதில் 'நொண்டிசாக்கு' சொல்லி ஹதீஸை மறுக்கும் இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது. எனவே இப்படி ஒரு செய்தியை நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள். எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று இவர்களைப்போல் அன்னை ஆயிஷா[ரலி] நிராகரித்தார்களா என்றால் இல்லவே இல்லை. மாறாக ரசூல்[ஸல்] அவர்கள் இந்த அர்த்தத்தின் சொல்லவில்லை. மாறாக இப்படித்தான் சொன்னார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்கள். விளங்கும் தன்மை ஒருவருக்கொருவர் முரண்படும். ரசூல்[ஸல் ] அவர்கள் சொன்னதை வேறு அர்த்தத்தில் உமர்[ரலி], இப்னு உமர்[ரலி], அபூ ஹுரைரா[ரலி] ஆகியோர் விளங்கியிருக்க, அது குர்ஆணோடு மோதும் நிலையிருக்க, ஹதீஸை மறுக்காமல் குர்ஆண் வசனத்தோடு மோதாத ஒரு விளக்கத்தைத்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் கொடுத்தார்கள். ஒரு ஹதீஸுக்கு விளக்கம் அளிப்பது, ஹதீஸை நிராகரிப்பவர்களுக்கு எப்படி ஆதாரமாகும்..? சிந்திக்கவேண்டுகிறோம்.
இந்த அதிமேதாவிகளுக்கு புரிவதற்காக,


முகவை அப்பாஸ் ததஜவில் இருந்ததில்லை என்று பீஜே கூறியதாக ஒருவர் கூறுகிறார்.


முகவை அப்பாஸ் ததஜவில் இருந்தார். ஆனால் மாநிலத்தலைவராக இருக்கவில்லை. அலுவலக செயலாளராகத்தான் இருந்தார் என்றுதான் பீஜே சொன்னார் என்று மற்ற ஒருவர் கூறுகிறார்.


இதில் முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் இந்த நூலை எழுதியவர்கள்.[அதாவது குர்ஆணோடு மோதுகிறது என்று கூறி ஹதீஸை மறுப்பவர்கள்]


இரண்டாவது ரகம் அன்னை ஆயிஷா[ரலி]யின் விளக்கம்.[சொன்ன தகவலை மறுக்காமல் தவறாக விளங்கியதை தெளிவு படுத்துவது]


ஆக, குர்ஆணுக்கு முரண்படுகிறது என்று இவர்களாக தீர்மானித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் இவர்கள், ஹதீஸை நிராகரிக்காமல்-அதே நேரத்தில் குர்ஆணுக்கும் முரண்படாமல் விளக்கம் தந்த மேதையான அன்னையவர்களை 'ஹதீஸ்களை நிராகரிப்பவர்' என்று அடையாளம் காட்ட முற்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒருவகை அவதூறாகும்.




சனி, 17 அக்டோபர், 2009

அன்சாரிகளுக்கோ இன நோய்; அலீ' அவர்களுக்கோ பரம்பரை நோய்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ரஸூல்[ஸல்] அவர்கள் மரணம் உறுதிசெய்யப்பட்டவுடன், அடுத்த ஆட்சியாளர் யார் என்ற ஆலோசனை பற்றிய அந்த ஹதீஸை இப்படி வர்ணிக்கிறார் அந்த அதிமேதாவி;

இப்ப என்ன நோய் புடிக்குதுன்னு கேட்டா, ரஸூல்[ஸல்] உயிரோடு இருக்கும் வரை]தொற்றாத நோய் அந்த இன உணர்வு அன்சாரிகளிடத்தில் தலை தூக்கியது. அவர்கள் ஸஅத் இப்னு உபாதா என்ற சகாபியின் இடத்தில் ஒன்று கூடி, இந்த இடத்த மதீனா ஆட்கள் புடிக்கணும். ஒவ்வொருத்தருக்கும் ஓடுகிறது; ஆஹா! இப்ப எடம் காலி. சொல்வாங்கல்ல.. 'அண்ணா எப்ப காலியாவான்; திண்ணை எப்ப காலியாகும்' ன்னு சொல்வாங்கல்ல. அந்தமாதிரி காத்துக்கிட்டு இருந்தமாதிரி, இந்த முஹாஜிர்களை விடக்கூடாது; போன போகுதுன்னு சாப்பாடு குடுத்தோம், போன போகுதுன்னு தங்குகிறதுக்கு இடத்த குடுத்தோம். இப்ப ஆட்சியையும் புடிக்க பாக்குறாய்ங்க.. விடக்கூடாது என்று ஆலோசனை செய்தார்கள்...என்று அவரது வர்ணனை செல்கிறது. இதை செவிமடுக்கும்போது அன்சாரிகள் இன உணர்வோடு, பதவி வேட்கையோடு காத்துக்கிடந்தார்கள் என்ற தோற்றத்தை இந்த வர்ணனை ஏற்படுத்துவதை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் விளங்கலாம். ஆனால் இந்த சம்பவத்திற்கு ஆதாரமாக அவர் மேற்கோள் காட்டியியிருக்கும் ஹதீஸை நீங்கள் படித்தால், அன்சாரிகள் ஆலோசனை செய்ததும், தாங்கள் தரப்பில் அமீர் நியமிக்கப்படவேண்டும் என்ற அந்த நியாயமான ஆசை நீங்கலாக, இவராக விட்டு அடித்த எந்த 'பிட்டும்' அதில் இல்லை என்பதை பார்க்கலாம். அந்த ஹதீஸ் இதோ;

உமர்[ரலி] அவர்கள் கூறியது;

அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பன}சாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள்a நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்' என்று கூறிவிட்டு நடந்தோம். பன}சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம். அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்' என்று கூறினார். (உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை. இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும்v (மக்க ) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத்t தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராகஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்' என்றார். அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்' என்றார். உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)' என்று கூறினேன்.மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். ஆக, முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

நூல்;புஹாரி எண் 6830
அன்பானவர்களே! மேற்கண்ட செய்தியில் அன்சாரிகள் குறித்து செய்த வர்ணனை பற்றி ஒரு வார்த்தையாவது உள்ளதா..? இதிலிருந்து சகாபாக்கள் விசயத்தில் எந்த அளவு பொடுபோக்கான வார்த்தைகள் கையாளப்பட்டு அவர்களின் கண்ணியம் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். மேலும் அதே வர்ணனையில், சுழற்சி முறையில் அமீரை தேர்ந்தெடுப்போம். அதாவது ஒரு வருஷம் அன்சாரிகள்; மறுவருஷம் முஹாஜிர்கள் என்று அன்சாரிகளில் சிலர் ஆலோசனை சொன்னார்கள். அதாவது காஷ்மீர்ல உள்ளது மாதிரி; உ.பி. உள்ளது மாதிரி... என்றும் அந்த அதிமேதாவி கூறுகிறார். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் சுழற்சி முறை அமீர் பற்றி அன்சாரிகள் சொன்னதாக ஏதாவது வார்த்தை உள்ளதா? சிந்திக்க வேண்டுகிறோம். தமது சொந்த மண்ணில் தமது ஊரை சேர்ந்த ஒருவர் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் இயல்பான ஆசை. அப்படிப்பட்ட ஆசைதான் அன்சாரிகளுக்கும் ஆரம்பத்தில் வந்தது. ஆனாலும், உமர்[ரலி] அவர்கள் அபூபக்கர்[ரலி] கரம் பற்றி பைஅத் செய்தவுடனே, அதன் தொடர்ச்சியாக அன்சாரிகளும் பைஅத் செய்து அபூபக்கர்[ரலி] அவர்களை அமீராக ஏற்றுக்கொண்டார்களே! அதுமட்டுமன்றி, உமர்[ரலி] அவர்களை அடுத்த ஜனாதிபதியாக அபூபக்கர்[ரலி] அவர்கள் அடையாளம் காட்டி வஸ்ஸியத் செய்தபோது, இந்த அன்சாரிகள் மறுத்து மதீனாவை நாங்கள்தான் ஆள்வோம் என்று அடம்பிடித்தார்களா? இல்லையே! மறு வார்த்தை பேசாமல் உமர்[ரலி] அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லையா? அடுத்து உஸ்மான்[ரலி] என்ற முஹாஜிரையும், அலீ[ரலி] என்ற முஹாஜிரையும் ஏற்றுக்கொள்ள வில்லையா? இதெல்லாம் சிந்தித்து விஷயத்தை அணுகாமல், எடுத்தேன்-கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் அன்சாரிகளை கவிழ்த்தவர், அடுத்து அலீ[ரலி] அவர்கள் விஷயத்திலும் பல்வேறு 'பில்ட்அப்கள்' எழுப்பியுள்ளார்.அந்த வர்ணனை இதோ;

அபூபக்கர்[ரலி] அமீரானபோது, அலீ[ரலி] அவர்களும், ஜூபைர்[ரலி] அவர்களும் பைஅத் செய்யவில்லை. ஜூபைர்[ரலி] பைஅத் செய்யாததற்கு காரணம் தெரியவில்லை. ஆனால் அலீ ஏன் பைஅத் செய்யலைன்னு பிற்காலத்துல அபூபக்கரிடம் அவரே சொல்றார்; நாங்க ரசூளுல்லாவோட மருமகன். அதுநாள் எங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கும்னு நெனச்சேன். அதுனால ஒங்களுக்கு பைஅத் பண்ணல. அடுத்த ஜனாதிபதி நான்தான் வரணும், நீங்க எப்பிடி வரலாம்..? ரசூளுல்லாவுக்கு அடுத்து ரசூளுல்லாவுடைய புள்ளைகளுக்கு தான அதிகாரம் வரணும்? ஆம்பள புள்ள இல்லையில.. பெண் வாருசுதான் இருக்குறோம். பெண் வாரிசுனா மருமகனுக்குத்தான வரணும். அப்ப நபிகள் நாயகம் விட்டுட்டுப்போன சொத்து இது[ஆட்சி அதிகாரம்]. இந்த அட்சி அதிகாரத்திலே எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நான் நினைத்தேன். ரசூளுல்லாவுக்கு அடுத்து ஆட்சிக்கு நான்தான் வரணும். இதுவந்து என்னுடய உள்ளத்தில் பதிந்துவிட்டது.அப்பிடி நான் வரணும்கிற இடத்துல நீங்க வந்தீங்கன்னா..? ஒங்க பாரம்பரியத்தை விட என் பாரம்பரியம் ஒசந்ததுல.. நாங்க ரசூளுல்லாவுடைய பாரம்பரியத்துல உள்ள ஆளுக. அப்துல் முத்தலிபோடவகையறா, நாங்கவந்து பனூஹாசிம் கோத்திரத்hசேர்ந்தவங்க.. நீங்க [அபூபக்கர்]என்னதான் ஒங்களுக்கு சிறப்பு இருந்தாலும் நீங்க ரசூலோட வாரிசா நீங்க..? என்று பேசுகிறார்.. மதீனா வாசிகளுக்கு உள்ளூர்வாசிகள் என்ற நோய்னா அலீ[ரலி] அவர்களுக்கு பாரம்பரியம் என்ற நோய்! என்று இப்படியாக வர்ணித்துவிட்டு அதற்கு சான்றாக அவர் சொன்ன ஹதீஸ் கீழே தந்துள்ளோம்;

அப்போது அலீ(ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி- அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கம் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கம் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்'' என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூ பக்ர்(ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல்விட்டு விடவுமில்லை'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலீ(ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும'' என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ(ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ(ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ(ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர்(ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல் மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர்(ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது'' என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்'' என்று கூறினர். தம் போக்கை அலீ(ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டனர்.
நூல்;புஹாரி எண் 4240-4242

அன்பானவர்களே! அபூபக்கர்[ரலி] ஆட்சித்தலைவர் ஆனபோது, அலீ[ரலி] அவர்கள் பைஅத் செய்யாததற்கு காரணம் என்ன என்று அலீ[ரலி] அவர்கள் கூறும்போது, அபூபக்கர் [ரலி ] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் குடுப்பத்தை சேர்ந்தவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஆட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கும்போது நடந்து கொண்டார்கள். நபி[ஸல்] அவர்களின் குடும்பத்தாராகிய எங்களுக்கும் ஆட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பங்கு உண்டு என்று மட்டுமே கூறியதை, அலீ பாரம்பரியம் பேசினார் நான் அந்த வகையறா..? இந்த வகையறா? நான் ரசூலோட மருமகன் நான்தான் ஆட்சிக்கு வரணும், நீங்க எப்பிடி வரலாம் என்றெல்லாம் அலீ[ரலி] அவர்கள் கூறியதாக 'அள்ளிவிட்ட' வார்த்தைகள் மேற்கண்ட ஹதீஸில் இருக்கிறதா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். சஹாபாக்களை நாங்கள் திட்டவில்லை; எங்கள் மீது அவதூறு சொல்லுகிறீர்கள் என்று அலறுபவர்கள், அன்சாரித்தோழர்கள் மீதும், அலீ[ரலி] அவர்கள் மீதும் அள்ளிவிட்ட அவதூறுகள் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்...?

புதன், 14 அக்டோபர், 2009

நண்மைக்கு ஏங்கிய நன்மக்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 843
இந்த பொன்மொழியில் பல படிப்பினை நமக்கு உள்ளது. ஏழைகளான சகாபாக்கள், வசதி படைத்தவர்களைப்போல் நாம் மாளிகை கட்டமுடியவில்லையே, ஆடை- ஆபரணங்களால் நம்மை அழகு படுத்திக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று வாகனங்கள் வைத்துக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று அறுசுவை உணவுகளை உட்கொண்டு சுகவாழ்க்கை வாழ முடியவில்லையே என்று அவர்கள் ஆதங்கப்பட்டு நபி[ஸல்] அவர்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. நபியவர்களே! அவர்களெல்லாம் செல்வ செழிப்பில் மிதக்கும்போது நாங்கள் மட்டும் வறுமையில் வாடவேண்டுமா? எனவே எங்களுக்கு செல்வம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, வசதி படைத்தவர்கள் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். இதன் மூலம் நன்மையில் அவர்கள் முந்துகிறார்களே என்றுதான் நபியவர்களிடம் முறையிடுகிறார்கள். இதை பார்க்கும்போது இந்த உலகத்தில் அவர்களை ஆட்கொண்டிருந்த வறுமையை மறுமைக்காக பொறுத்து, அமல்களின் மூலம் அந்த மறுமையை அடையமுயற்சித்த அவர்களின் அடங்காத தாகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இன்றும் கூட நம்மில் சிலர் தங்களுக்கு ஏதேனும் வறுமை வந்துவிடுமானால், என்ன அல்லாஹ்! நான் அவனை ஐவேளை தொழுகிறேன்; எனக்கு வறுமையை தந்துள்ளான். ஆனால் பெருநாள் மட்டுமே பள்ளிவாசல் பக்கம் எட்டிப்பார்க்கும் மூஸாவுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளானே என்று அங்கலாய்ப்பவர்களையும் பார்க்கிறோம். நம்முடைய சிந்தனை அவனைவிட நாம் எப்படி பணக்காரனாக ஆவது என்று; ஆனால் நபியவர்களால் பண்படுத்தப்பட்ட அந்த சத்திய சகாபாக்களுக்கோ என்ன செய்தால் நாம் மற்றவர்களைவிட நன்மையில் முந்தமுடியும் என்ற சிந்தனை. அதுதான் அந்த மேன்மக்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

இது ஒருபுறமிருக்க, அந்த ஏழை சகாபாக்களுக்கு நன்மையில் முந்துவதற்கு ஒரு செயலை, அதாவது தொழுகைக்கு பிறகு 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் சொன்னார்களே! இது இன்றைக்கு நம்மில் எத்துனை பேரிடம் நடைமுறையில் உள்ளது..? விரலை அசைப்பதிலும்-சத்தமிட்டு ஆமீன் சொல்வதிலும் காட்டும் ஆர்வம் இதில் காட்டப்படுகிறதா? என்றால் இல்லை. இமாம் ஸலாம் கொடுத்தவுடன் மடைதிறந்த வெள்ளம்போல் அடுத்தவர்களை தாண்டிக்குதித்து வெளியேறுவதே நம்மில் பலரின் இன்றைய நிலை. இதில் பர்ல் மட்டுமே தொழும் தவ்ஹீத் வாதிகளும் உண்டு. இவ்வாறெல்லாம் இருக்கும் நமது நிலை மாறவேண்டும். சகாபாக்கள் எப்படி நன்மையை தேடி, தேடி செய்தார்களோ, அதுபோல் நாமும் செய்யமுன்வந்தால்தான் மறுமையில்,அந்த சத்திய சகாபாக்கள் அளவுக்கு 'மெரிட்'டில் பாஸ் பன்ன முடியாவிட்டாலும், எதோ 'பெயில்' ஆகாமலாவது தப்பிக்கலாம்.

என்ன! அடுத்த தொழுகையில் இறைவனை 33முறை இறைவனைத் துதிக்கவும் ; 33 முறை இறைவனைப் புகழவும் ; 33 முறை இறைவனைப் பெருமைப்படுத்தவும் ரெடியா..?

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

உஸ்மான்[ரலி] அவர்கள் ஃபித்அத்தை உண்டாக்கினார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை மட்டம் தட்டும் நூலில், வஹிக்கு முரணான சஹாபாக்களின் நடவடிக்கைகள் என்ற தலைப்பின் கீழ்,
ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.[புஹாரி எண் 912 ]
என்ற இந்த ஹதீஸை பதிவு செய்துவிட்டு,
வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரு கலீபாக்களும் அதை செயல்படுத்தியுள்ளனர் . ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அவர்கள் 'சுயமாக' இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள். எதோ ஒரு காரணத்தால் நபிவழியை கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. என்று எழுதியுள்ளார்கள்.

அன்பானவர்களே! அவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸில் உஸ்மான்[ரலி] அவர்கள் ஒரு அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள் என்று வருவது உண்மையே! ஆனால் எதற்காக அந்த அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்கள் அதிகமான காரணத்தால் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேதாவி கூறுகிறார்; மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அதிகப்படுத்தினார் என்று தனது சொந்த கருத்தை திணிக்கிறார். சரி! இதில் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக ஒரு அறிவிப்பை உஸ்மான்[ரலி] அதிகப்படுத்தினார் என்று கூறியவர், அடுத்து எதோ ஒரு காரணத்தால் நபிவழியைக்கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள் என்று கூறி தனக்குத்தானே முரண்படுகிறார். மேலும், இந்த செய்தியை வஹிக்கு முரணான நடவடிக்கைகள் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்ததால் உஸ்மான்[ரலி] அவர்கள் ஃபித்அத்தை உருவாக்கினார் என்று அடையாளம் காட்டுகிறார். அப்படியாயின் எல்லா ஃபித்அத்தும் வழிகேடு நரகில் தள்ளும் என்ற நபி[ஸல்] அவர்களின் பொன்மொழியின் படி உஸ்மான்[ரலி] அவர்கள் நரகம் செல்வார்களா? இப்படி ஒரு கேள்வி இலங்கையில் நடைபெற்ற விவாதத்தில் ஷேய்க் அப்துல்லா ஜமாலி என்பவரால் முன்வைக்கப்பட்டபோது,
அதற்கு பதிலளித்த இந்த அறிஞர், உஸ்மான்[ரலி] அவர்கள் பாங்கை அதிகப்படுத்தினார்கள் என்று வரவில்லை. அறிவிப்பை செய்யுமாறு சொன்னதாக அதுவும் கடைத்தெருவில் சொல்ல சொன்னதாகத்தான் வருகிறது. எனவே இது பாங்காக இருக்கமுடியாது. பாங்காக இருந்தால் பள்ளிவாசலில் சொல்லாமல் ஏன் கடைத்தெருவில் சொல்லவேண்டும் என்று அன்று சொன்னவர், இன்று அதையே வஹிக்கு முரணான, நபி[ஸல்] அவர்களின் நடைமுறைக்கு முரணான உஸ்மான்[ரலி ] அவர்களின் செயலாக காட்ட முற்படுகிறார் என்றால், இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து இன்னொரு அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது பாங்கு என்பது தொழுகைக்கு அழைக்கும் அழைப்பு அது எங்கு தொழுகை நடைபெறுகிறதோ அங்கு சொல்லப்படும். பள்ளிவாசல் இருந்தால் பள்ளிவாசலில் சொல்லப்படும். பள்ளிவாசல் இல்லாத ஊரில் அல்லது பாலைவனத்தில் இருந்தால் அவர்கள் எந்த இடத்தில் தொழுகை நடத்துவார்களோ அங்கு சொல்லப்படும் . ஆனால் மதீனாவில் புகழ் பெற்ற பள்ளிவாசல் இருக்க அங்கு அதிகப்படியான பாங்கு சொல்லுமாறு உஸ்மான்[ரலி] அவர்கள் சொல்லவில்லை. மாறாக கடைத்தெருவில் சொல்ல சொன்னதன் மூலம் அது பாங்கு அல்ல சாதரண அறிவிப்புதான் என்பது திண்ணம். இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இன்று உஸ்மான்[ரலி] அவர்களை வஹிக்கு முரனானவ்ராக காட்டும் இந்த 'அதிமேதாவி'யின் மாணவரும், ததஜ துணைத்தலைவருமான மரியாதைக்குரிய மவ்லவி. சுலைமான் அவர்கள் தனது நபிவழியில் தொழுகை சட்டங்கள் என்ற நூலில் இந்த விஷயத்தை எழுதியுள்ளதை பாருங்கள்;
உஸ்மான்[ரலி] அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கை போன்றது அல்ல. மக்கள் அதிகமானதால் உஸ்மான்[ரலி] அவர்கள் 'ஸவ்ரா'எனும் இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்ல சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள வீடாகும்.[இப்னுமாஜா 1125 ]
உஸ்மான்[ரலி] அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பை கூட பள்ளிவாசலில் செய்யவில்லை.எனவே உஸ்மான்[ரலி] அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியாகும்.
என்று எழுதியுள்ளார்.

அன்பானவர்களே! உஸ்மான்[ரலி] அவர்கள் சாதரணமாக சொல்லுமாறு பனித்த அறிவிப்பை, வஹிக்கு முரனானனதாக காட்டும் இந்த அதிமேதாவிக்கு அவரது மாணவரின் மறுப்பே போதுமானதாகும். சுலைமான் சொன்னது எனக்கு தெரியாது என்று இந்த அறிஞர் கூறமுடியாது. ஏனெனில் இந்த நூல் இவரது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவரது வலைத்தளத்தில் வெளியாகும் அனைத்துக்கும் நான் பொறுப்பாவேன் என்றும் கூறியுள்ளார். எனவே அன்பானவர்களே! உரிய ஆய்வின்றி உஸ்மான்[ரலி] அவர்களை குற்றவாளியாக்கும் இவர்களை போன்றவர்களை இனம்கானுங்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 10 அக்டோபர், 2009

உமர்[ரலி] மற்றும் அன்னை ஆயிஷா[ரலி] மீதும் புதிய அவதூறு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் வஹிக்கு முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள் என்ற பகுதியில், நபி[ஸல்] அவர்கள் இறந்த போது உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று சொன்னதை இப்படி வர்ணிக்கிறார்கள்;
நபி[ஸல்] அவர்கள் மரணித்தபோது உமர்[ரலி]உள்ளிட்ட பல நபித்தோழர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்கமாட்டார்கள் என்றும், உயிர்த்தெழுவார்கள் என்றும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தை கொன்டிருந்தார்கள்அபூபக்கர்[ரலி] தக்க ஆதாரங்களை எடுத்துக்காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையை புரியவைக்கும் வரை நபி[ஸல்] அவர்களின் மரணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
என்று எழுதிவிட்டு இரு ஹதீஸ் எண்களை போட்டுள்ளார்கள். அந்த இரு ஹதீஸ்கள் கீழே;
  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; நபி[ஸல்] அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். [புஹாரி எண் 1242 ]
  • அபூ பக்ர்(ரலி) மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தார்கள். அவர்களின் உரையின் காரணத்தால், 'முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்' என்றும் (திருக்குர்ஆன் 03: 144-ம்) வசனத்தை ஓதியபடி மக்கள் வெளியே சென்றார்கள்.[நூல்;புஹாரி எண் 3670 ]

அவர்கள் எடுத்துவைத்த இந்த இரு ஹதீஸ்களிலும் நபி[ஸல்] அவர்கள் மரணமடையவில்லை என்ற மனநிலையில் சகாபாக்கள் இருந்ததையும் அபூபக்கர் [ரலி] அவர்கள் தெளிவுரைக்கு பின் நபி[ஸல்] அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள் என்பதை விளங்கமுடிகிறது. இந்த இரு செய்திகளிலும் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கமாட்டார்கள் என்று எந்த சகாபியாவது சொன்னதாக குறிப்பு உள்ளதா..? என்றால் இல்லை. அதே நேரத்தில் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர்[ரலி] அவர்கள் சொன்ன செய்தி வேறு எண்ணில் பதிவாகியுள்ளது;

  • நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். - அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), 'அதாவது ஆலியாவில்" என்று கூறினார். அப்போது உமர்(ரலி) எழுந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.[புஹாரிஎண் 3667 ]

இந்த செய்தியை கவனமாக படியுங்கள். உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் இறக்கவில்லை [அதாவது] மரணிக்கவில்லை என்று சொன்னார்களே யன்றி, மரணிக்கமாட்டார்கள் என்று சொல்லவில்லை. மரணிக்கவில்லை என்பதற்கும் மரணிக்க மாட்டார்கள் என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

மரணிக்கவில்லை; இப்போது மரணிக்கவில்லை ஆனால் மரணிப்பார் என்ற அர்த்தத்தை தரும். உதாரணமாக ஈஸா[அலை] அவர்கள் மரணிக்கவில்லை என்று நாம் சொல்கிறோம். அதற்காக அவர்கள் மரணிக்கவே மாட்டார்கள் என்று அர்த்தமா? என்றால் இல்லை . இப்போது அவர்கள் மரணிக்கவில்லை. ஆனால் மரணிப்பார்கள் என்று விளங்கிக்கொள்கிறோம். இந்த அர்த்தத்தில்தான் உமர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று சொன்னார்கள் என்று விளங்கவேண்டும்.

மரணிக்கமாட்டார்கள்; இது எப்போதுமே மரணம் இல்லை என்ற அர்த்தத்தை தரும். எனவே உமர்[ரலி] அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தாதபோது, மரணிக்க மாட்டார்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொன்னார்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தை விதைத்தார்கள் என்று கூறுவது அப்பட்டமான அவதூரல்லவா?

மேலும், அந்த 72 . கூட்டம் யார்? என்ற உரையில் மேற்கண்ட சம்பவத்தை பற்றி சொல்லும்போது இப்படி அந்த அறிஞர் வர்ணிக்கிறார்;

கெட்ட கொள்கைகள் இஸ்லாமிய போர்வையை போர்த்திக்கொண்டு உலகுக்கு வந்தது அத்தகைய கொள்கைகளை ஆய்வு செய்யப்போகிறோம் என்ற பீடிகையோடு, நபி[ஸல்] அவர்கள் மரணித்த உடன் ஏற்ப்பட்ட முதல் கொள்கை குழப்பம் நபி[ஸல்] அவர்களின் மரணித்த அடுத்த வினாடியே ஏற்பட்டது. உமர் சொல்றார்; அல்லாஹ் மேல ஆணையா சொல்றேன் ரசூலுல்லாஹ் மவ்த்தாபோகல. தொலைச்சிருவேன்! இப்ப நான்தான் லீடரு; என்று உமர் லீட் பண்றாரு.

அன்பானவர்களே! உமர்[ரலி] அவர்கள் சொன்ன வாசகம் மேற்கண்ட ஹதீஸில் நாம் உங்களுக்கு விளக்கியுள்ளோம். இந்த அறிஞரின் கூற்று பிரகாரம் இஸ்லாமிய வரலாற்றில் முதல் முதலாக வழிகெட்ட கொள்கையை சொன்னவர் உமர்[ரலி] என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறார். சரி! ஒருவரை கொள்கை குழப்பம் ஏற்படுத்தியவர் என்று எப்போது சொல்லமுடியும் என்றால், ஒருவர் அறிந்தோ-அறியாமலோ ஒரு தவறான கருத்தை சொல்கிறார். அவரது கருத்து தவறு என்று குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்கள் காட்டப்பட்டபின்பும், இல்லை நான் சொன்னதுதான் சரி என்று தனது கருத்திலேயே நிலைத்திருந்தால்தான் அவரை கொள்கை குழப்பம் ஏற்ப்படுத்தியவர் என்று சொல்லமுடியும். ஒருவாதத்திற்கு இந்த அறிஞர் சொன்ன வார்த்தையை தான் உமர்[ரலி] சொன்னார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அபூபக்கர்[ரலி] அவர்கள் குர்ஆண் ஆதாரத்தை முன்வைத்தபோது ஏற்றுக்கொண்டு தரையில் சரிந்தார்களே! பிறகு எப்படி கொள்கை குழப்பம் ஏற்ப்படுத்தியவராவார்..?

சரி! நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர்[ரலி] அவர்கள் கூறியதற்கு காரணம் இரண்டு. ஒன்று; உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அப்படியே ஏற்பவர்கள். நம்மைப்போல் நபி[ஸல்] சொன்ன விஷயம் 'அறிவுக்கு பொருந்துகிறதா' குர்ஆணோடு மோதுகிறதா' என்றெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருப்பவர் அல்ல. மேலும், நபி[ஸல்] அவர்களின் நிழலாக இருந்தவர். நபி[ஸல்] அவர்கள் தன் திரு வாயால், நானும் அபூபக்கரும்-உமரும் இங்கே போனோம், நானும் அபூபக்கரும்-உமரும் இதை செய்தோம், நானும் அபூபக்கரும்-உமரும் இப்படி சொன்னோம் என்று சொல்லலும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் இஸ்லாமிய பயணத்தில் தளபதியாக திகழ்ந்தவர் உமர்[ரலி] அவர்கள். தன் உயிரும் மேலான தோழர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் சொன்ன வாசகம்தான் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்பது.[இதை அந்த அறிஞரும் வேறு வார்த்தையில் கூறியுள்ளார்].

காரணம் இரண்டு;ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் பார்வை (அவர்களின் மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள், 'மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)" என்று (மூன்று முறை) கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் காசிம்(ரஹ்) (நபி-ஸல் அவர்களின் இறப்பு சம்பவம் தொடர்பான) இந்த ஹதீஸை முழுமையாக எடுத்துரைத்தார்கள். ஆயிஷா(ரலி) கூறினார். (அபூ பக்ர், உமர் ஆகிய) அவ்விருவரின் உரைகளில் எந்தவோர் உரையைக் கொண்டும் அல்லாஹ் நன்மை புரியாமல் இல்லை. உமர் அவர்கள் (தவறாக நடந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று) மக்களை எச்சரித்தார்கள். ஏனெனில், மக்களிடையே நயவஞ்சககுணமுடையவர்களும் (அப்போது) இருந்தனர். (உமர் அவர்களின்) அந்த (அச்ச மூட்டும்) உரையின் வாயிலாக அல்லாஹ் அ(ந்த நயவஞ்சக குணமுடைய)வர்களை (சத்தியத்தின் பக்கம்) திருப்பினான். [புஹாரி எண் 3669 ]

உஹத் களத்தில் நபி[ஸல்] உயிரோடு இருக்கும்போதே மரணித்து விட்டதாக நயவஞ்சகர்கள் ஃபித்னா செய்து முஸ்லிம்கள் மத்தியில் பலவீனத்தை உண்டாக்க முயற்சித்தது போன்று, நபி[ஸல்] மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நேரத்திலும் செய்யலாம் என்பதால் உமர்[ரலி] அவர்கள் எச்சரிக்கை செய்ததாக அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. ஆக, நபி[ஸல்] அவர்களின் மரணவேளையில் உமர்[ரலி] அவர்கள் விடுத்த எச்சரிக்கை மூலம் அல்லாஹ் நன்மையை நாடியதாக அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த 'அதிமேதாவியோ' இல்லை உமர் கொள்கை குழப்பம் உண்டாக்கினார் என்கிறார். அல்லாஹ் அறிந்தவன்.

அடுத்து, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது 72 .கூட்டம் யார் என்ற உரையில் புதிய அவதூறை சுமத்துகிறார். அதாவது பெண்களில் மிக அறிவுடைய ஆயிஷாநாயகி[அவர் பாஷையில்] நபி[ஸல்] அவர்கள் மரணித்தவுடன்,

'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள் என்றும் அதற்கான ஹதீஸ் புஹாரியில் உள்ளது என்றும் பேசினார். நாமும் புஹாரியில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கக்கூடிய, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட சுமார் 957 .ஹதீஸ்களை பார்த்தோம். எந்த ஒன்றிலும் அன்னையவர்கள் இந்த அறிஞர் சொன்னது போன்று சொல்லவில்லை. மாறாக உமர் ரலி அவர்கள் சொன்னதாக அன்னையவர்கள் அறிவிக்கும் செய்திதான் 3667 வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது.

ஆக அன்பானவர்களே! விருப்பையும்-வெறுப்பையும் தனியாக வைத்துவிட்டு, நீங்கள் இந்த ஆக்கத்தை படித்தால் உமர்[ரலி] அவர்கள் மீதும், அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீதும் இந்த அதிமேதாவி அபாண்டமான அவதூறை சுமத்தியுள்ளார் என்பது ஊர்ஜிதமாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

இறை வசனத்தை செவியேற்றார்- அதற்கு முழுமையாக கட்டுப்பட்டார்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
'உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா'(ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், 'என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா' என்று கூறினார். அதற்கு அவர், 'உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்' என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் சென்றபோது, 'கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை' என்று கூறினார். உமர்(ரலி) கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, '(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக!' (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர்(ரலி) அதை மீறவில்லை. (பொதுவாக) உமர்(ரலி) இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 4642

இந்த செய்தியை நாம் படித்துப் பார்க்கும்போது, நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழரும், சொர்க்கம் உறுதி செய்யப்பட்டவருமான உமர்[ரலி] அவர்கள், தான் ஒரு அதிகாரம் பொருந்திய ஆட்சியாளராக இருந்ததும், தனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர் மீது ஆரம்பத்தில் கோபம் கொண்டாலும், அவர்கள் முன் இறைவசனம் ஒதிக்கட்டப்பட்டவுடன் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக அமைதியடைகிறார்கள் எனில், அதுதான் சகாபாக்கள்! இன்று மதரசாவில் சில ஆண்டுகள் பெஞ்சை தேய்த்துவிட்டு பட்டம் என்ற பெயரில் ஒரு பேப்பரை வாங்கிவிட்டால், நான் தன் உலகமகா அறிவாளி என்றும், நான் சொல்வது மட்டுமே இஸ்லாம் என்றும், மற்ற அனைவரும் அவர்கள் அறிஞர்களாக இருந்தாலும் அறிவிலிகள் என்று வசைபாடுவதோடு, திருக்குர்ஆண் வசனத்தை மேற்கோள் காட்டினாலும் அதை தனது சொந்த வியாக்கியானங்களின் மூலம் மழுப்பும் சில அதிமேதாவிகள், அல்லாஹ்வின் வார்த்தைக்கு முன் தான் ஜனாதிபதியே ஆனாலும் சாமான்யன் என்று சரணடைந்த உமர்[ரலி] அவர்களிடம் பாடம் படிக்கவேண்டும்.
மேலும், சமான்யராண நம்மில் சிலரும் , அறிந்தும் அறியாமலும் அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆணுக்கு மாற்றமான வரதட்சனை-மது-மாது-புகை-சினிமா-பொய்-அவதூறு- இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிமின் கடமை, அல்லாஹ்வும்-அவனது தூதரும் கட்டளையிட்டுவிட்டால் அதற்கு பரிபூரணமாக கட்டுப்படுவது. அதில் நமக்கு உமர்[ரலி] அவர்களிடத்தில் அருமையான படிப்பினை உள்ளது.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

சஹாபாக்களை விட நாம் சிறப்பாக விளங்கமுடியுமா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை விட நாம் இன்று சிறப்பாக மார்க்கத்தை விளங்கிக்கொள்ளமுடியும். காரணம், சஹாபாக்களின் இறுதிக் காலத்தில் தான் நூல் வடிவில் திருக்குர்ஆன் தாயரிக்கப்பட்டது. அதுவும் எல்லா சகாபியிடமும் குர்ஆன் பிரதிகள் இருக்கவில்லை. ஆனால் இன்று நம்மிடையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரதி குர்ஆன் வைத்துள்ளோம். அதுபோல் முழுமையாக எல்லா ஹதீஸ்களையும் அறிந்த ஒரு சகாபியும் இருக்கவில்லை. அவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் தொகுத்து நூல் வடிவில் இருக்கவில்லை. எனவே அவர்கள் தங்கள் அளவில் தெரிந்த விஷயங்கள் அடிப்படையில் மட்டும் விளங்கமுடியும். ஆனால் இன்று நாம் மார்க்க விஷயங்கள் முழுமையாக கிடைக்கப்பெற்ற காலத்தில் வாழ்கிறோம். எனவே எந்த ஒரு கடுமையான பிரச்சினையாயினும் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் மார்க்கத்தின் சரியான தீர்வை அடையமுடியும். எனவே நம்மால்தான் சகாபாக்களை விட மார்க்கத்தை சிறப்பாக விளங்கமுடியும் என்ற கருத்து பரவலாக சிலரால் விதைக்கப்படுகிறது. ஒரு அடிப்படையை விளங்கிக்கொள்ளவேண்டும். சகாபாக்கள் ஒவ்வொருவரிடமும் குர்ஆணின் பிரதிகள் இல்லாவிட்டாலும், அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் வாழ்ந்தது. அவர்கள் உள்ளத்தில் பதிந்தவற்றை அடிப்படையாக கொண்டே இன்று பேப்பரிலும் பல்வேறு பரிணாமங்களிலும் பதிந்து பாதுகாத்து வருகிறோம். மேலும் ஹதீஸ்கள் முழுமையாக அறிந்த ஒரு சகாபியும் இல்லாவிட்டாலும் அவர்கள் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் தமக்கு தெரியவில்லை என்றால் சக தோழர்களிடம், இதுகுறித்து நபி[ஸல்] அவர்கள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று கேட்டு அதன் அடிப்படையில் தங்களின் முடிவை எடுத்தார்கள். திருக்குர்ஆன் பிரதிகளை கையில் வைத்திராத, நபி [ஸல்] அவர்களின் அனைத்து பொன்மொழிகளையும் முழுமையாக மனனம் செய்திராத அந்த தோழர்கள் எத்துனை விஷயத்தில் மார்க்கத்திற்கு முரானாக தீர்ப்பளித்தார்கள்...?விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் அனைத்தையும் கரைத்து குடித்த நாம் கடந்த 25 ஆண்டுகளில் எத்துனை மஸாயில்களில் நேற்று ஒரு தீர்ப்பை சொல்லி அதை இன்று மாற்றிய பட்டியல் ஏராளம் உண்டே! மார்க்கம் சம்மந்தமான அனைத்தும் முழுமையாய் கிடைக்கப்பெறாத[?] சகாபாக்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் தவறான தீர்ப்பளித்தால் கூட அதை குறைகாண முடியாது. ஆனால் இன்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்துள்ளோம் என்று சொல்லக்கூடிய நம்மிடையே ஏன் குறுகிய காலத்தில் இவ்வளவு தடுமாற்றங்கள்..? மேலும் அரை மணிநேரம் ஒதுக்கினால் எந்த பிரச்சினையாயினும் மார்க்கத்தின் சரியான தீர்வை எட்டமுடியுமேன்று சொல்லும் நாம், அந்த அரைமணி நேரத்தில் ஒரு உமர்[ரலி]யோ, ஒரு அபூபக்கர்[ரலி]யோ, அபூஹுரைரா[ரலி]யோ சொன்னதைத்தானே தீர்வாக சொல்கிறோம். பின்பு எப்படி அவர்களுக்கு தெரியாதது நமக்கு தெரியும் என்று மார்தட்டமுடியும்..? மேலும் குர்ஆனில்-ஹதீஸ்களில் சொல்லப்படும் விஞ்ஞான கருத்துக்கள்சகாபாக்கள் காலத்தை விட இன்று நாம்தான் தெளிவாக புரிந்துகொள்ளும் காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்லப்படுகிறது. மார்க்கத்தில் கூறப்பட்ட விஞ்ஞானத்தை எந்த அளவுக்கு நாம் புரிந்துள்ளோம் என்பதை நாம் பின்னால் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த விஞ்ஞான கருத்துக்கள் சகாபாக்களுக்கு புரிந்ததோ இல்லையோ, நபி[ஸல்] அவர்கள் சொன்னவுடன் அப்படியே நம்பினார்களே! நம்மைப்போல், அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிவருவானா..? அப்ப அர்ஷில் யார் இருப்பது என்று விஞ்ஞான கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கவில்லையே..? அடுத்து சகாபாக்களுக்கு விளங்காத விஞ்ஞானத்தை நாம் விளங்கிய லட்சனத்திற்கு ஒரு உதாரணம்;

விண்வெளி பயணம் மேற்கொள்ளலாம் என்று குர்ஆன் சொல்கிறது என்று கூறி அதற்கு ஆதாரமாக அர்ரஹ்மான் அத்தியாயத்தில் இடம் பெறும் மனித ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. என்ற வசனத்தை சிலர் காட்டுவதுண்டு. ஆனால் இந்த வசனத்தை அடுத்து வரும் வசனத்தை பாருங்கள்;
உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். (55:35)
முதல் வசனம் விண்வெளி பயணத்தை வலியுறுத்துவதாக இருந்தால் அடுத்த வசனம் உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்று முரணாக வருவது ஏன்? முதலில் வாங்க என்று சொல்லிவிட்டு பின்பு நீங்கள் விண்வெளிக்கு வந்தால் நெருப்புஜுவாலைகள் வீசப்படும் என்று முரணாக இறைவன் கூறுவானா?எனவே இது விண்வெளி பயணம் சம்மந்தமானது அல்ல. மறுமை சம்மந்தமானது என்பதற்கு பின்வரும் அதே அத்தியாயத்தின் வசனங்கள் சான்று பகர்கிறது;

فَإِذَا انشَقَّتِ السَّمَاء فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:38)
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. (55:39)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:40)
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:42)
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). (55:43)
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். (55:44)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:45 ]

இந்த வசனங்கள் கூறுவதென்ன..? மறுமையில் இறைவன் தண்டிக்க நாடும்போது அதிலிருந்து தப்பிக்க துணிவிருந்தால், மனித ஜின் வர்க்கமே வானம் பூமியின் எல்லைகளை கடந்து போய் பார். அப்போது உங்கள் மீது நரகத்தின் நெருப்பு ஜுவாலைகள் வீசப்படும் [எனவே தப்ப முடியாது]என்கிறான். ஆக மறுமை பற்றி சொல்லும் வசனங்களை விஞ்ஞானம் என்று நாம் விளங்கியதுதான் சகாபாக்களை மிஞ்சிய சிந்தனை போலும்.

அடுத்து சகாபாக்களை விட சகாபாக்களிடமிருந்து செவியுருபவர்கள் நன்கு பேணி பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்ற நபி[ஸல்] அவர்களின் வார்த்தையை காட்டி சகாபாக்களை விட நாம் சிந்தனையில் சிறந்தவர்கள் என்று காட்ட சிலர் முயற்ச்சிக்கிறார்கள். அந்த ஹதீஸ்;

இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை (நேரடியாக)க் கேட்டவரை விட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு கர்ப்பவராயிருக்கலாம்.[புஹாரி]

இதில் நபி[ஸல்] அவர்கள் வந்தவர்கள் வராதவர்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்கிறார்கள். வந்தவர்கள் யார்? சகாபாக்கள்! வராதவர்கள் யார் அன்றைய காலத்தில் வாழ்ந்த சகாபாக்கள்! ஆக சொல்பவரும் ஸஹாபி, அவரிடமிருந்து செவியேர்ப்பவரும் சகாபிகள். நபி[ஸல்] அவர்களின் போதனையை நேரடியாக கேட்ட சகாபாக்களை விட, இவரிடமிருந்து செய்தியை செவியுறும் ஸஹாபி இந்த செய்தியை நன்கு விளங்குபராக காப்பவராக இருக்கலாம் என்றுதான் புரிந்து கொள்ள முடியுமேயன்றி, சகாபாக்கள் தலைமுறைக்கு பின் சுமார் 14 தலைமுறைக்கு பின் வந்த நம்மை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது என்று கூறுவது சரியா? மேலும் சகாபாக்கள் சிலர் சிலரை விட சிறப்பாக விளங்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சான்று;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி), 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வகை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், 'எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர்(ரலி), 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்'' என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4294 ]

உமர்[ரலி] அவர்கள் மேற்கோள் காட்டி விளக்கம் கேட்ட வசனத்திற்கு மற்ற சகாபாக்கள் எல்லாம் நாம்மை போன்று அந்த வசனத்தின் நேரடிப் பொருளை கூறிக்கொண்டிருக்க இப்னு அப்பாஸ்[ரலி] அவர்களோ அந்த வசனத்தின் உள் அர்த்தத்தை விளக்குகிறார்கள் எனில், சகாபாக்கள் சிலர் சிலரை விட விளக்கமுடையவர்களாக இருந்திருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் நபி[ஸல்] அவர்கள், வந்தவர்களிடமிருந்து செவியுறுபவர்கள் சிறந்த முறையில் பேணுபவர்களாக இருக்கலாம் என்றார்கள்.

எனவே என்னதான் நவீன வசதிகளை பெற்றாலும், மார்க்கத்தை முழுமையாக கரைத்துக்குடித்தாலும் அந்த சகாபாக்களுக்கு மேலாக நாம் சிறந்தவர்களாக ஆக முடியாது என்பதே உன்மை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

வியாழன், 1 அக்டோபர், 2009

மாற்றுக்கருத்து சொல்லும்போதும், மற்றவரின் 'மாண்பு' காக்கும் தன்மை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
மனிதர்களாகிய நமக்கு சிந்திக்கும் ஆற்றலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த சிந்தனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. அது மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லது உலக விஷயமாகவே இருந்தாலும் சரியே! அப்படியாயின் செய்யவேண்டியது என்ன? ஒரு விஷயத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுமாயின் அதில் எவர் சொல்லும் கருத்துக்கள் குர்ஆண்-ஹதீஸுக்கு உட்பட்டதாக இருக்கிறதோ அதை சொல்பவர் 'பட்டம் வாங்கி பறக்கவிடாத' சமான்யராகவே இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன? ஒருவர் அல்லது ஒரு சாரார் மட்டுமே மார்க்க மேதைகள் என்றும், அவர்கள் மட்டுமே ஆய்வாளர்கள் என்றும், அவர்கள் சொல்வது மட்டுமே சரியானதாக இருக்கும் என்றும் எழுதப்படாத ஒரு சட்டம் தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே வேரூன்றி உள்ளது. அந்த ஒருவர் அல்லது ஒரு சாரார் சொல்லும் கருத்துக்களுக்கு மாற்றமாக யாரேனும் கருத்துசொன்னால் அவ்வாறு சொல்பவர்களை கருத்து ரீதியாக, ஆதாரங்கள் ரீதியாக எதிர்கொள்ளாமல் தரம்தாழ்ந்து, அவன்-இவன் என்றும்-பொய்யன் ஜமாஅத் என்றும்-அடுத்தவர் தின்று வாந்தி எடுத்ததை விழுங்கி மறு வாந்தி எடுத்தவன் என்றும்-கோமாளி-பைத்தியம் என்றும்-சாக்கடைப் பன்றிகள் என்றும்-அறிவிலி என்றும்-தடம் புரண்டவர்கள் என்றும் இன்னும் எண்ணற்ற வார்த்தைகளால் விமர்சிப்பதை பார்க்கிறோம். அதோடு தங்களின் கருத்துக்கு மாற்று கருத்தை சொன்ன அறிஞர்களின் கருத்தை வெளியிட்டமைக்காக இஸ்லாம்கல்வி.காம் என்ற இஸ்லாமிய தளத்தை பலவேஷம்.காம் என்றும், குப்பை.காம் என்றும் வெளிப்படையாகவே விமர்சிப்பதையும் பார்க்கிறோம். மேற்குறிப்பிட்ட அந்த தளத்தில் [இவர்கள் பார்வையில்]சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் இருந்தாலும், எண்ணற்ற இஸ்லாமிய செய்திகள் அல் குர்ஆண்-ஹதீஸ் ஆதாரத்தோடு தொகுத்து வழங்கப்பட்டுள்ளதே! அந்த தளம் குப்பை.காம் என்றால் இந்த இஸ்லாமிய செய்திகளும் குப்பைதானா? இஸ்லாம் இவ்வாறுதான் மாற்றுக்கருத்து கொண்டவர்களை விமர்சிக்க சொல்கிறதா? இதோ நபிகளார்[ஸல்] அவர்களிடத்தில் ஒரு அழகிய முன்மாதிரி;

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன ('அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே' எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
ஆதாரம்;புஹாரி எண் 6147

பொய்யையே மூலதனமாக கொண்ட கவிஞனின் கூற்றில் உள்ள ஒரே ஒரு உண்மையை கூட நபி[ஸல்] அங்கீகரித்துள்ளார்கள் என்றால், தமது கருத்துக்கு மாற்றமான கருத்துகள் இடம் பெற்றமைக்காக ஒரு தளத்தையே குப்பை என்று விமர்சிப்பது சரியா? மேலும் நபி[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை சஹாபாக்கள் மாற்றுக்கருத்துடையவர்களுக்கு எப்படி அழகான முறையில் பதிலளித்துள்ளார்கள் பாருங்கள்;

உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்" என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே" என்றும் கூறினார்கள்.
ஹதீஸ் சுருக்கம், ஆதாரம்;புஹாரி எண் 1286

இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை கவனிக்கவேண்டும். ஒன்று 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர்[ரலி] கூறுவதை அறிந்த அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் நம்மைப்போல், உமர் சொல்வது குர்ஆணுக்கு முரணானது இப்படி நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இந்த ஹதீஸ் 'ரிஜெக்டேடு' என்று சொல்லவில்லை. மாறாக நபி[ஸல்] அவர்கள் அப்படி சொல்லவில்லை. இப்படித்தான் சொன்னார்கள் என்று விளக்கமளிக்கிறார்கள்.

இரண்டு; உமர்[ரலி] அவர்கள் விளங்கியதற்கு மாற்றமாக விளக்கமளித்த அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள், உமர்[ரலி] அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! என்று அழகான வார்த்தையை கொண்டு விளக்கமளிக்கிரார்களே! இதுதான் நபி[ஸல்] அவர்களின் பாடம் படித்த அந்த சத்திய சகாபாக்களுக்கும்- 'கேள்வி ஞானம்' மூலம் மார்க்கத்தை படித்த நமக்கும் உள்ள வேறுபாடு. இதிலே சஹாபாக்களை விட நாம் 'மேன்மக்கள்' என்ற சிந்தனை வேறு நமக்குள்ளே!
ஆகவே அன்பானவர்களே! கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம்- அதில் கண்ணியத்தை பேணுவோம். எல்லோரும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிடக்கூடியவர்களும் அல்ல. எல்லோரும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் தவறாக சொல்லக்கூடியவர்களும் அல்ல. எனவே கருத்தை ஆளை வைத்து முடிவு செய்வதை விட ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்வோம். அதுதான் நபிவழியும்-உயர்வான நபித்தோழர்களின் நடைமுறையுமாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.