புதன், 28 அக்டோபர், 2009

ஹதீஸை விளக்கினார்களா..? விலக்கினார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை நிராகரிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள், ஹதீஸ்கள் குர்ஆணுக்கு முரண்படுமா..? என்ற நூலை எழுதியுள்ளார்கள். அதில் 'குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்கமாட்டார்கள் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் கூறுகிறோம். நாம் கூறும் இந்த விதியின் அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததை பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக்கொள்ளலாம். என்று பதிவு செய்துள்ளார்கள் .அதாவது குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற காரணத்தை கூறி இந்த 'புதுமைவாதிகள்' ஹதீஸை நிராகரித்தது போன்று, சகாபாக்களும் நிராகரித்தார்கள் என்று கூறவருகிறார்கள். அதோடு தங்களின் கூற்றுக்கு சான்றாக சில ஹதீஸ்களையும் முன்வைத்துள்ளார்கள். அதில் சில;

  1. உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்" என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே" என்றும் கூறினார்கள்.[முஸ்லிம் ].

  2. உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது;

இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக இப்னு உமர்[ரலி]அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா[ரலி] அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா[ரலி] அவர்கள் கூறினார்கள்; இப்னு உமர் தவறாக விளங்கிக்கொண்டார். இறந்தவர் தன் சிறிய,பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர் என்று தான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம்]

  • இரண்டு மனிதர்கள் ஆயிஷா[ரலி] அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண், கால்நடை, வீட்டு ஆகியவற்றில் மட்டும்தான் இருக்கிறது என்று நபி[ஸல்]அவர்கள் கூறியதாக அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவித்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்துவிட்டு, அபுல்காசிமிற்கு இந்த குர்ஆணை அருளியவன் மீது சத்தியமாக! அறியாமை காலமக்கள் சகுனம் என்பது பெண்,கால்நடை,வீட்டு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்றுதான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்த துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது என்ற வசனத்தை ஓதினார்கள்.[அஹ்மத்]

மேற்கண்ட மூன்று செய்திகளையும் பதிவு செய்துவிட்டு, குர்ஆணுக்கு முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று நாம் கூறும் அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்காக இந்த செய்திகளை கூறியுள்ளோம்என்று முடித்துள்ளார்கள்.

இந்த இந்த ஹதீஸ்களை கவனமாக படியுங்கள். இதில் 'நொண்டிசாக்கு' சொல்லி ஹதீஸை மறுக்கும் இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது. எனவே இப்படி ஒரு செய்தியை நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள். எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று இவர்களைப்போல் அன்னை ஆயிஷா[ரலி] நிராகரித்தார்களா என்றால் இல்லவே இல்லை. மாறாக ரசூல்[ஸல்] அவர்கள் இந்த அர்த்தத்தின் சொல்லவில்லை. மாறாக இப்படித்தான் சொன்னார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்கள். விளங்கும் தன்மை ஒருவருக்கொருவர் முரண்படும். ரசூல்[ஸல் ] அவர்கள் சொன்னதை வேறு அர்த்தத்தில் உமர்[ரலி], இப்னு உமர்[ரலி], அபூ ஹுரைரா[ரலி] ஆகியோர் விளங்கியிருக்க, அது குர்ஆணோடு மோதும் நிலையிருக்க, ஹதீஸை மறுக்காமல் குர்ஆண் வசனத்தோடு மோதாத ஒரு விளக்கத்தைத்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் கொடுத்தார்கள். ஒரு ஹதீஸுக்கு விளக்கம் அளிப்பது, ஹதீஸை நிராகரிப்பவர்களுக்கு எப்படி ஆதாரமாகும்..? சிந்திக்கவேண்டுகிறோம்.
இந்த அதிமேதாவிகளுக்கு புரிவதற்காக,


முகவை அப்பாஸ் ததஜவில் இருந்ததில்லை என்று பீஜே கூறியதாக ஒருவர் கூறுகிறார்.


முகவை அப்பாஸ் ததஜவில் இருந்தார். ஆனால் மாநிலத்தலைவராக இருக்கவில்லை. அலுவலக செயலாளராகத்தான் இருந்தார் என்றுதான் பீஜே சொன்னார் என்று மற்ற ஒருவர் கூறுகிறார்.


இதில் முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் இந்த நூலை எழுதியவர்கள்.[அதாவது குர்ஆணோடு மோதுகிறது என்று கூறி ஹதீஸை மறுப்பவர்கள்]


இரண்டாவது ரகம் அன்னை ஆயிஷா[ரலி]யின் விளக்கம்.[சொன்ன தகவலை மறுக்காமல் தவறாக விளங்கியதை தெளிவு படுத்துவது]


ஆக, குர்ஆணுக்கு முரண்படுகிறது என்று இவர்களாக தீர்மானித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் இவர்கள், ஹதீஸை நிராகரிக்காமல்-அதே நேரத்தில் குர்ஆணுக்கும் முரண்படாமல் விளக்கம் தந்த மேதையான அன்னையவர்களை 'ஹதீஸ்களை நிராகரிப்பவர்' என்று அடையாளம் காட்ட முற்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒருவகை அவதூறாகும்.




1 கருத்து: