வெள்ளி, 22 அக்டோபர், 2010

உஸ்மான்[ரலி] அவர்கள், இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; பீஜே மீண்டும் பல்டி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
''நபித்தோழர்களும்- நமது நிலையும்'' என்ற நூலில், வஹிக்கு  முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள் என்ற தலைப்பில், உஸ்மான்[ரலி] அவர்கள் ஜும்மாவுக்கு இரண்டு பாங்குகளை உருவாக்கி நபிவழிக்கு மாறு செய்து விட்டார் என்ற வாதத்தை வைத்து,

''வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரு கலீபாக்களும் அதை செயல்படுத்தியுள்ளனர் . ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அவர்கள் 'சுயமாக' இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள். எதோ ஒரு காரணத்தால் நபிவழியை கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது என்று எழுதியிருந்தார் பீஜே..

உஸ்மான்[ரலி] அவர்கள் இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; மாறாக அவர்கள் கடைத்தெருவில் ஒரு அறிவிப்பைத்தான் செய்தார்கள் என்று, இந்த நூலை வெளியிடுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இலங்கை விவாதத்தில் பீஜே கூறியிருந்தார். ஆனால் அதிலிருந்து பல்டியடித்து, சஹாபாக்களை நபிவழிக்கு முரனானவர்களாக காட்டும் நோக்கில், உஸ்மான்[ரலி] குறித்து தனது மேற்கண்ட நூலில், உஸ்மான்[ரலி] இரண்டாம் பாங்கை உருவாக்கினார் என்று அபாண்டமாக,  சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட ஒரு நபித் தோழரை குற்றம் சுமத்தினார் பீஜே. அதை அதை விமர்சித்து  நாம் கடந்த  ஓராண்டுக்கு முன் எழுதிய ஆக்கத்தை படிக்க இங்கே கிளிக் செய்க;http://sahaabaakkal.blogspot.com/2009/10/blog-post_11.html

இப்போது மீண்டும் இங்கு இதைப் பற்றி எழுதுவதற்கு காரணம், பீஜே மார்க்க விஷயத்தில் எவ்வாறெல்லாம்  பல்டியடிப்பார் என்று காட்டவே. இப்போது அவரது வலைதளத்தில் ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பீஜே,  உஸ்மான்[ரலி] அவர்கள் ஜும்மாவுக்கு இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; மக்கள் பயான் கேட்க தாமதமாக வருவதால், கடைத்தெருவில் ஒரு அறிவிப்பைத்தான்  செய்தார்கள். எனவே உஸ்மான்[ரலி] அவர்கள் பித்அத்தை உருவாக்கவில்லை  என்று கூறி மீண்டும் பல்டியடித்துள்ளார். அவரது உரையை கேட்க இங்கு கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/jummavil_usman_2bangu/

உஸ்மான் ரெண்டு பாங்கை உண்டாக்கிவிட்டார் என்று மேடை தோறும் நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முழங்கி, எழுத்துக்களில் வடித்து அந்த உயர்வான நபித்தோழரை ஃபித்அத் வாதியாக  காட்டினீர்களே! அதற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

சத்திய சஹாபாக்கள் குறித்து இவர் சொன்ன அத்துணை அபாண்டங்களையும், இவர் வாயாலேயே மறுக்க வைத்து அந்த நல்லறத்  தோழர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்துவான் இன்ஷா அல்ல்லாஹ். அந்த மனிதநேய செம்மல்கள்  மீது பீஜே போன்றோர் பூசிய கறைகள் கழுவப்பட்ட நாம் அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக