செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இறைத்தூதரின் பெயரை இதயத்தில் மட்டுமல்ல. எழுத்திலும் அழிக்கமாட்டேன்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள்" (என்று சொல்லிவிட்டு) முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி), 'நீர் அல்லாஹ்வின் தூதரக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்" என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை" என்று கூறிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள்.

ஆதாரம்;புகாரி எண் 2698

ஹுதைபியா உடன்படிக்கையை எழுதிய அலீ[ரலி] அவர்கள், அதில் எழுதப்பட்ட அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் என்ற வாசகத்தை அழிக்குமாறு குறைஷிகளின் வேண்டுகோளின்படி நபி[ஸல்] அவர்கள் அழிக்குமாறு கட்டளையிட்டபின்னும் அல்லாஹ்வின் தூதர் என்ற வாசகத்தை அழிக்கமாட்டேன் என்று உறுதியாக கூறிய அலீ[ரலி] அவர்களின் உள்ளத்தில்தான் எத்துனை ஈமானிய உறுதி பாருங்கள்! அல்லாஹ்வின் தூதராக நபி[ஸல்] அவர்களை ஏற்றபின், அவர்களின் பெயரை எங்கள் இதயத்திலிருந்து மட்டுமல்ல ஏட்டிலிருந்து கூட அழிக்கமாட்டோம் என்ற அலீ[ரலி] அவர்களின் இந்த ஈமானிய உறுதி நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக