புதன், 18 நவம்பர், 2009

உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றது அபூபக்கர்[ரலி]யின் மகனா..?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
உஸ்மான்[ரலி] அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட அந்த சம்பவம் பற்றி பீஜே அவர்கள், தனது அந்த ௭௨ கூட்டம் யார்.? தொடர் உரையில் பேசும்போது,

முஹம்மத் இப்னு அபூபக்கர் மற்றும் முஹம்மத் இப்னு உபைதா ஆகிய இருவரும் உஸ்மான்[ரலி] அவர்களுக்கு எதிராக ஆட்களை திரட்டினார்கள். இதுல முஹம்மத் இப்னு அபூபக்கற பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். ஏன்னா உஸ்மான் கொலைல இவரு முக்கிய சீன்ல வர்றாரு. அபூபக்கரு பையனா இப்பிடி செஞ்சது..? அபூபக்கர் சித்தீக் இப்பிடி வளத்து உட்டுட்டு போய்ட்டாரே! அப்படீன்னு சொல்ல இயலாது. ஏன்னா அபூபக்கர் மகனா இவரு இருந்தாலும் அபூபக்கர் மவ்த்தா போகும்போது இவருக்கு ரெண்டரை வயசுதான். பின்னாடி இவரோட அம்மாவ அதாவது அபூபக்கரோட மனைவிய அலீ[ரலி] கல்யாணம் பண்றாரு. அவர்தான் இவரை வளக்குராரு. இவரோட[முஹம்மத்] போதனை, டிரைனிங் இதுக்கெலாம் யாரு பொறுப்புன்னா அலீதான் என்கிறார் பீஜே.
அதாவது உஸ்மான்[ரலி] அவர்களுக்கு எதிராக படை திரட்டக்கூடிய, ஜிஹாத் என்ற பெயரால் 'ரவுடித்தனம்' [இதுவும் பீஜே பயன்படுத்திய வார்த்தைதான்] செய்யக்கூடிய, உஸ்மான்[ரலி] அவர்களை கொலை செய்யும் கொலைகாரரை பெற்றதுதான் அபூபக்கர்[ரலி] . ஆனால் அவரை இப்படி வளர்த்தது அலீ[ரலி] அவர்கள் என்று சொல்லி அலீ[ரலி] அவர்கள், முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்களை வளர்த்த வளர்ப்பில் குறை காண்கிறார் பீஜே.
மேலும்,

உஸ்மான்[ரலி]] அவர்களை மூன்றுபேர் சேர்ந்து கொன்றார்கள். அவர்களில் ஒருவர் முஹம்மது இப்னு அபூபக்கர்[ரலி] ஆவார். இந்த மூன்று பேருக்கும் உஸ்மான்[ரலி] அவர்கள் கொல்லப்பட்டதில் நேரடி பங்கு உண்டு பேசுகிறார். அதாவது உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றவர் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகன் முஹம்மத்[ரலி] என்று கூறுவதன் மூலம் முஹம்மத்[ரலி] அவர்களை 'கொலைகாரர்' என்று திட்டவட்டமாக கூறுகிறார். இதற்கு ஆதாரமாக வழக்கம் போல எந்த நூலையும் மேற்கோள் காட்டவில்லை. ஆனாலும், உஸ்மான்[ரலிஅவர்கள் முற்றுகையிடப்பட்டபோது மதீனத்து சஹாபாக்கள் கோழைத்தனமாக[?] வ்வீட்டிற்குள் முடங்கிவிட்டார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தும்போது அதற்கு சான்றாக 'பிதாயா வன் நிஹாயா' என்ற வரலாற்று நூலை ஆதாரமாக காட்டுகிறார்.

குர்ஆணும்-ஹதீசும் மட்டுமே மார்க்கம் என்று போதனை செய்யக்கூடிய அறிஞர் பீஜே, ஒரு வரலாற்று நூலை மைய்யமாக வைத்து கொண்டு, சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாரை கொலைகாரராக அடையாளம் காட்டுவது எப்படி என்பது அவருக்கே வெளிச்சம். இது ஒருபுறமிருக்க, உண்மையில் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகன் முஹம்மத், உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றார்களா என்றால், அவர் ஆதாரமாக காட்டும் அதே 'பிதாயா வன் நிஹாயா' வில் இல்லை என்று தெளிவாகவே உள்ளது.
அதாவது முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்கள் ஆட்களை திரட்டி மதீனா நோக்கி வந்ததும், உஸ்மான்[ரலி] வீட்டை முற்றுகையிட்டதும், உஸ்மான் [ரலி] அவர்களின் வீட்டிற்குள் சென்றதும் உண்மை. அதற்கு பின்னால் என்ன நடந்தது..? இதோ அந்த நூலில் உள்ள செய்திகள்;

قال سيف بن عمر التميمي رحمه الله عن العيص بن القاسم، عن رجل، عن خنساء مولاة أسامة بن زيد - وكانت تكون مع نائلة بنت الفرافصة امرأة عثمان - أنها كانت في الدار ودخل محمد ابن أبي بكر يأخذ بلحيته وأهوى بمشاقص معه فيجأ بها في حلقه، فقال مهلا يا بن أخي، فوالله لقد أخذت مأخذا ما كان أبوك ليأخذ به، فتركه وانصرف مستحييا نادما، فاستقبله القوم على باب الصفة فردهم طويلا حتى غلبوه، فدخلوا وخرج محمد راجعا.
முஹம்மது இப்னு அபூபக்கர்(ரலி)உதுமான் ரலி அவர்களின் இல்லத்தில் நுழைந்து உதுமான்(ரலி)அவர்களுடைய தாடியை பிடித்தார்கள் இன்னும் அவருடைய தொண்டைக்குழியை பிடித்தார்கள் அப்பொழுது உதுமான்(ரலி)அவர்கள் எனது சகோதரனின் மகனே நிறுத்து எனக்கூறிவிட்டு உனது தந்தை புடிக்காத இடத்தை நீ புடிக்கிறாயா என கேட்டவுடன் கவலை கொண்டவர்களாக வெட்கத்துடன் வெளியேறினார்கள் அப்பொழுது அவ்வீட்டின் திண்ணையில் உள்ளவர்கள் அவரை மிகைத்துவிட்டு உள்ளே சென்றார்கள.

உஸ்மான்[ரலி] அவர்கள் தாடியையும், தொண்டையையும் பிடித்த முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்கள் உஸ்மான்[ரலி] அவர்களின் அறிவுரையை கேட்டவுடன் அவர்களை விட்டுவிட்டு வெளியேறி விட்டதாகவும், மற்றவர்கள் முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்களை மிகைத்துவிட்டு உஸ்மான்[rali] அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்ததையும் மேற்கண்ட செய்தி தெளிவாக கூறுகிறது. ஆகஎ முஹம்மத் இப்னு அபூபக்கர்[ரலி] அவர்கள் உஸ்மான்[ரலி] அவர்களை கொல்லவில்லை என்று தெளிவாக உள்ளபோது, இப்படி அப்பட்டமாக ஒரு நபித்தோழர் அல்லது நபித்தோழரின் மகனை கொலைகாரர் என்று கூறுவது அநியாயம் மற்றும் அவதூறாகும்.
மேலும், அதே நூலில் கிடைக்கும் குறிப்பு;
والصحيح أن الذي فعل ذلك غيره، وأنه استحى ورجع حين قال له عثمان: لقد أخذت بلحية كان أبوك يكرمها
சுரியான சொல் முஹம்மது(ரலி)அவர்கள். அவரை [usmaan] கொல்லவில்லை உன்னுடைய தந்தை புடிக்காத தாடியை நீ புடிக்கிறாயா?என உதுமான்(ரலி) கேட்டவுடன் அவர்கள் விட்டு விட்டு திரும்பிவிட்டார்கள.
உஸ்மான்[ரலி] அவர்களை கொன்றது யார்..?
وعن ابن عمر قال: كان اسم الذي قتل عثمان أسود بن حمران
இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
அஸ்வது இப்னு ஹம்ரான் என்பவர் உதுமான்(ரலி)அவர்களை கொன்றார்.

அன்பானவர்களே !பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவத்தை, எதோ பக்கத்தில் இரு பார்த்தது போன்று கொலைப்பழி சுமத்துபவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

1 கருத்து:

  1. Assalamu alaikkum
    sahaabakkalin waralaaru elloralum mikawum virumbi padikkum pakuthi. athanaip purinthu kondu thaankal seyalpadukireerkal baarakallah!
    irunthaalum awai mikawum surukkamaaka iruppathu emaattamalikkirathu owworuwarthum mulu walkai waralaattaiyum tharuweerkalaayin(Mikawum kastamaanathuthan) innum payanadaiyalaam. melum near vali nindra pitkaalaththu ella kaleefakkalinathum thalapathikalinathum waralaattaiyum tharuweerkalaayin maanawarkalum, waralaaru theriyaatha emathu samukamum payanadaiyum Insha Allah

    Munawwar, Maruthamunai, Sri Lanka

    பதிலளிநீக்கு