செவ்வாய், 29 செப்டம்பர், 2009

அம்ர் இப்னு அல்ஆஸ் அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னதில் தவறில்லை..?

இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லும்[?] இணைய தளத்தில் ஒரு கேள்வி;நீங்கள் சகாபாக்களை 'கிரிமினல்' என்று சொன்னதாகவும் மேலும், 'அண்ணன் எப்ப போவான்; திண்ணை iஎப்ப காலியாகும்' போன்றவாறு பேசியுள்ளீர்கள் என்று கூறுகிறார்களே உண்மையா?

பதில்; அந்த 72 கூட்டம் என்ற உரையை முழுமையாக கேளுங்கள். உண்மையை நீங்களே உணர்வீர்கள். அலீ[ரலி] அவர்களுக்கும்-முஆவியா[ரலி] அவர்களுக்கும் இடையே நடந்த யுத்தம் சமாதானத்தில் முடிந்தது. இருவர் சார்பிலும் தலா ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டனர். அலீ[ரலி] அவர்களின் சார்பில் நடுவராக இருந்த அபூ மூஸா நேர்மையாக வெளிப்படையாக நடந்து கொண்டார். முஆவியா[ரலி] சார்பில் நடுவராக இருந்த அம்ர் இப்னு ஆஸ் அப்படி நடக்கவில்லை. நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல்,மோசடி ஆகியன மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தும் அதை அவர் செய்தார். அபூ மூஸா அப்பாவியாக நடந்துகொண்டார். ஆனால் அம்ர் இப்னு ஆஸ் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் நடந்துகொண்டார். கிரிமினலாக சிந்தித்தார் என்ற கருத்தில் நான் பேசினேன்.இவ்வாறு நடந்துகொண்ட நபரை கவனத்தில் கொண்டவர்கள் சகாபியை இப்படி விமர்சிக்கலாமா என்று கேட்கின்றனர். நடந்து கொண்ட செயலை கவனிப்பவர்கள் இந்த செயலை இந்த வார்த்தையால்[கிரிமினல்] வர்ணிப்பது சரிதான் என்று புரிந்து கொண்டனர். அம்ர் இப்னு ஆஸ் செய்தது போன்ற செயலை இன்றைக்கு ஒருவர் செய்தால் அதை எந்த வார்த்தையால் விமர்சிப்பார்கள்.? அவர் நடந்துகொண்டது போல் இப்போது ஒருவர் நடந்து கொண்டால் அது அனுமதிக்கப்பட்டது என்று கூறுவார்களா? என்னுடய பார்வையில் நான் செய்த விமர்சனத்தில் மார்க்க அடிப்படையில் எந்த தவறும் இல்லை.

அன்பானவர்களே! உயர்வான நபித்தோழர் அம்ரு அப்னு ஆஸ்[ரலி] அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னபோது, பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தபோது 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று இந்த அறிஞர் ஒரு மேடையில் விளக்கம் சொன்னார். அதையொட்டி 'கிரிமினல்' என்ற பேச்சு பற்றி விமர்சனம் வரும்போதெல்லாம் அந்த அறிஞருக்கு ஆதரவாக ததஜ சகோதர்களில் சிலர் 'கிரிமினல்' பற்றி தமிழ் அகராதி பாடம் நடத்தி விமர்சனங்களை முனை மழுங்க செய்தார்கள். ஆனால் இப்போது சம்மந்தப்பட்டவர் நான் அம்ர் இப்னு ஆஸ் அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னதில் தவறில்லை என்று சொன்னதோடு, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், மோசடி, கழுத்தறுப்பு வேலையையும் அம்ரு இப்னு ஆஸ் செய்தார் என்று அந்த சகாபிக்கு புகழ் மாலை[?] சூட்டியுள்ளார். இதுகாறும் ' அந்த அர்த்தமில்லை, இந்த அர்த்தமில்லை என்று 'அகராதியாக' சப்பை கட்டு கட்டியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்..? மேலும், அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் செய்த காரியத்தை இன்று ஒருவர் செய்தால் என்ன நிலை..? என்று அந்த அறிஞர் கேட்கிறார். அப்படியாயின் சகாபாக்களும் நாமும் ஒன்று என்ற பிளாட்பாரம் உருவாக்கப்பட்டு விட்டதோ..?

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரளச்செய்து விடாதே!
திண்ணை எப்ப காலியாகும்..? பதிலும்-பார்வையும் இன்ஷா அல்லாஹ் நாளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக