சனி, 5 செப்டம்பர், 2009

இறைவனுக்கு எதிரி எனக்கும் எதிரியே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பத்ர் யுத்தத்தின் முடிவில் எழுபது இணைவைப்பாளர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்கள் குறித்து[இவர்களை என்ன செய்யலாம்..?] நபி[ஸல்] அவர்கள் தமது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், இறைத்தூதரே! இவர்கள் நம் சிறிய தந்தையின் சந்ததிகள். நமது கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.எனவே இவர்களிடம் பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு இவர்களை விடுவித்துவிடுவோம் . இவர்கள் மூலம் கிடைக்கும் பொருளைக்கொண்டு நாம் போர்கருவிகள் வாங்கலாம்.இறைவன் நாடினால் இவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை கூட ஏற்கலாம் என்றார்கள். பின்பு நபி[ஸல்] அவர்கள் கத்தாபின் மகனே [உமரே] உமது கருத்து என்ன என்றார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கர்[ரலி] அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இவர்களை [கைதிகளை] எங்கள் பொறுப்பில் விடுங்கள்..அவர்களின் கழுத்தை நாங்கள் எடுத்துவிடுகிறோம். அலீ[ரலி]யின் உறவினரான அகீலை அலீ[ரலி] இடம் ஒப்படையுங்கள். அகீலின் கழுத்தை அவர் வெட்டட்டும். எனது உறவினர்களை என்னிடம் ஒப்படையுங்கள். அவர்களின் கழுத்தை நான் துண்டிக்கிறேன். ஏனெனில் இவர்கள் இறை நிராகரிப்பின் தலைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் விளங்குபவர்கள் என்று உமர்[ரலி] கூறினார்கள். ஆனால் நபி[ஸல்] அவர்கள் அபூபக்கர்[ரலி] அவர்களின் கருத்தை ஏற்று பிணைத்தொகையை பெற்று கைதிகளை விடுதலை செய்யுமாறு பணித்தார்கள்.

ஆதாரம்; முஸ்லிம்.

இந்த பொன்மொழியை சற்று கவனமாக படித்தோமானால், உறவா அல்லது உயிரான மார்க்கமா என்ற நிலை வரும்போது, தமது ரத்த சொந்தமாகவே இருந்தபோதிலும் அவர்கள் சத்திய மார்க்கத்தின் தடைக்கற்களாக இருந்தவர்கள். அதோடு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக படை திரட்டி வந்தவர்கள். இனைவைப்புக்கு சாட்சியாக திகழ்பவர்கள் எனவே இவர்களின் தலை இந்த மண்ணில் உருள்வதுதான் சிறந்தது என்று சூளுரைத்த உமர்[ரலி] அவர்களின் அந்த வீரம் இந்த புவியும்-வானும் நிலைத்த்திருக்கும் காலமெல்லாம் நல்லோரால் போற்றப்படும் என்பதில் ஐய்யமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக